மூன்றாவது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை: இருப்பினும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை!

வெள்ளி, 4 நவம்பர் 2022 (10:25 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச் சந்தை சரிந்துள்ளது. ஆனால் தினமும் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் 
 
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 15 புள்ளிகள் சரிந்து 18036  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
 
நேற்று மற்றும் நேற்று முன்தினம் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே பங்குச்சந்தை சரிந்தது போலவே இன்றும் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே சரிந்துள்ளது என்பதால் இன்னும் 60 ஆயிரத்துக்கும் அதிகமாகவே சென்செக்ஸ் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மு
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்