வாரத்தின் முதல் நாளே சரிவில் பங்குச்சந்தை.. இந்த வாரம் எப்படி இருக்கும்?

திங்கள், 4 செப்டம்பர் 2023 (10:21 IST)
வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் சார்ந்து 44,405 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை ஒன்பது புள்ளிகள் உயர்ந்து 19,443 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை சென்செக்ஸ் குறைந்திருந்தாலும் நிஃப்டி உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது 
 
இருப்பினும் இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்