பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

புதன், 12 ஜூலை 2023 (10:32 IST)
இந்தியா பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதையும் இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய லாபத்தை பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் நேற்று பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை இன்றைய 10 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 629 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி வெறும் 3 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 19,443 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இன்று மிக குறைந்த அளவே உயர்ந்துள்ளதால் இன்னும் சில மணி நேரங்களில் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்