பங்குச்சந்தை இன்று உயர்வு: சென்செக்ஸ் நிப்டி நிலவரம்

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (10:10 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 61262என வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 18226 என வர்த்தகமாகி வருகிறது.
 
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச் சந்தை சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றாலும் வரும் நாட்களில்  ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் முதலீடு செய்பவர்கள் கவனத் துடன் பங்குச்சந்தை நிபுணர்களை கலந்து ஆலோசித்து முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்