பங்குச்சந்தை இன்றும் ஏற்றம் தான்.. ஆனால்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

புதன், 11 ஜூன் 2025 (10:30 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக மந்தமாக வர்த்தகம் ஆகி வருகிறது என்பதும், பெரிய அளவில் ஏற்றமும் இன்றி, இறக்கமும் இன்றி வர்த்தகமாகி வரும் நிலையில், இன்றும் அதே நிலை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 80 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 82,478 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 31 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 25,131 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லை என்றாலும், மீண்டும் மிகப்பெரிய அளவில் உயர அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, HCL டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதேபோல், அப்பல்லோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, HDFC வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, ஜியோ பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், TCS, டைட்டான் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்