வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (16:37 IST)
FILE
இன்றைய பங்குச் சந்தையின் முடிவில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 157.64 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18947 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46.75 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5612 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், சன் பார்மடிகல் இந்தியா, என்.எம்.டி.சி மற்றும் ஹீரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், எஸ்.பி.ஐ, டாடா பவர்ஸ், ஆர்.ஐ.எல், டாக்டர் ரெட்டிஸ் லேப், டிசிஎஸ் மற்றும் ஆக்சிஸ் பேன்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்