×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பொது இடத்தில் தம்பதியர் முத்தம் கொடுப்பது ஆபாசமில்லை- டெல்லி உயர்நீதிமன்றம்
புதன், 2 டிசம்பர் 2009 (11:51 IST)
புதிதாக திருமணமான தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. அதிலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்தித்துக் கொள்ளும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளனர்.
டெல்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஒரு இளம் ஜோடி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தத்தை பரிமாறிக் கொண்டதாகத் தெரிகிறது. இதை அவ்வழியே சென்ற சிலர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவலர்களும் விரைந்து வந்து, அந்த ஜோடியை கைது செய்து காவலில் வைத்தனர். இது குறித்து அந்த ஜோடியினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எங்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் ஆர்ய சமாஜ் கோயிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் வரை இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.
இந்த நேரத்தில்தான் நாங்கள் துவாரகா ரயில் நிலையத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் முத்தம் கொடுத்துக் கொள்ளவில்லை. செல்போனில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போல புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். இதை யாரோ சில விஷமிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் எங்களை கைது செய்தனர். நாங்கள் திருமணமானவர்கள் என்று சொன்னதையும் காவல்துறையினர் கேட்கவில்லை. எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதர், தம்பதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குக்கு தடை விதித்தார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில், புதிதாக திருமணமான தம்பதியர் பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வது ஆபாசமல்ல. அதிலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்தித்துக் கொள்ளும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. தங்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறிய பிறகும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தது அதிர்ச்சியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை
டாய்லெட்டுக்குள் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? மூலம் வரும் ஆபத்து! - மருத்துவர்கள் எச்சரிக்கை!
மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!
அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!
செயலியில் பார்க்க
x