பார்த்த முதல் நாளே

படம் : வேட்டையாடு விளையாடு குரல் : ஜெயஸ்ரீ, உன்னி மேனன்
பாடல் : பார்த்த முதல் இயற்றியவர் : தாமரை

பெண்

பார்த்த முதல் நாள
உன்னை பார்த்த முதல் நாள
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போல

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!

ஆண்

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறத
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன்

பெண்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகம
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே

ஆண்

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பது வியப்பே
உன்னை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

பெண்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடைபெற்றும் போகாமல் இருப்பாய
சரி என்று சரி என்று உனை போக சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

ஆண்

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறத
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

பெண்

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

ஆண்

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை ஆனேன்

ஆண்

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்

பெண்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

ஆண்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பெண்

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாள
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!

வெப்துனியாவைப் படிக்கவும்