சவ்கிதாரா?? கூர்க்காவே போதுமே அதுக்கு!!! டிவி நிகழ்ச்சியில் மோடியை கலாய்த்த இளைஞர்; அசிங்கப்பட்ட பாஜக தலைகள்

செவ்வாய், 19 மார்ச் 2019 (13:59 IST)
டிவி நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் சவ்கிதார் வேண்டுமென்றால் நேபாளில் இருந்து கூர்காவை வரவழைத்துக் கொள்வோம் அதற்கு மோடி தேவையில்லை என பேசியிருக்கிறார். 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் திடீரென பிரதமர் மோடி தனது பெயரை டிவிட்டரில் சவுகிதார் (காவலாளி) நரேந்தர மோடி என மாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து பாஜகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்கு முன்னால் சவ்கிதார் என்பதை சேர்த்து பரப்பி வருகின்றனர். பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதம் நிகழ்வில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்களிடம் கலந்துரையாடுவது போல அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் பாஜக தலைவர்களிடம் பேசிருக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து எழுந்த இளைஞர் ஒருவர், பிரதமர் மோடி எங்களை பக்கோடா விற்க சொல்கிறார். 
அவரே அவரை சவ்கிதார் என்று சொல்லிக்கொள்கிறார். எங்களுக்கு ஊர் காவலன்தான் வேண்டும் என்றால் நாங்கள் நேபாளில் இருந்து கூர்க்காவை வரவழைத்துக் கொள்வோம். எங்களுக்கு தேவை காவலர் அல்ல நல்ல பிரதமர் தான் என அதிரடியாக பேசினார். 
 
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி அந்த இளைஞருக்கு வாழ்த்துக்களும் கண்டனங்களும் ஒரு சேர வந்து கொண்டிருக்கின்றன.

 

21 gun salute to this young boy. pic.twitter.com/sOkIBJCgx0

— Gaurav Gupta (@GauravGupta1110) March 17, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்