கோவையில் Gpay மூலம் பணம் பட்டுவாடா..! பாஜக மீது திமுக புகார்...!!

Senthil Velan

வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:22 IST)
கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பணபட்டுவாடா செய்வதாக பாஜக மீது திமுக புகார் தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.   வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக திமுக புகார் தெரிவித்துள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. 

ALSO READ: விருதுநகர் வேட்பாளர் ராதிகா மீது புகார்..! தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!
 
கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக புகார் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்