சினிமாவை விட்டு நிரந்தரமாக விலக முடிவெடுத்த அனுஷ்கா...? காரணம் கோலிவுட்டா...?

புதன், 22 ஜூலை 2020 (09:24 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் இவர் நடிப்பில் வெளியான, அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி,  போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தற்ப்போது சினிமாவை விட்டு நிரந்தரமாக விலக முடிவெடுத்துள்ளதாக த்தகவல் ஒன்று வெளியாகி அனுஷ்கா ரசிகர்களை அப்செட் செய்துள்ளது. காரணம், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெய்ட் போட்ட அவர் 5 வருடங்கள் ஆகியும் தன்னுடைய உடல் எடை குறைக்க முடியாமல் திணறி வருகிறார்.

இதனால் படவாய்ப்புகள் பறிபோனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும், கோலிவுட்டில் அவருக்கு நடந்த ஏதோ ஒரு விஷயம் அவரை மிகவும் காயப்படுத்திவிட்டதாம். இதனால் தமிழில் கிடைத்த ஒன்னு ரெண்டு வாய்ப்பையும் நிராகரித்து விட்டார் என கூறப்படுகிறது. தற்போது ‘பாகமதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் அனுஷ்காவின் ரசிகர்கள் இந்த செய்தியை அப்செட் ஆகிவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்