சுப்பிரமணியபுரம், சென்னை -28, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெய். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அஞ்சலிக்கும் அவருக்கும் காதல் இருப்பதாக கிசு கிசு இருப்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ 2011ஆம் ஆண்டில் எனக்கும், அஞ்சலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. அதன்பின் அவர் தெலுங்கு சினிமா பக்கம் போய்விட்டார். அதன்பின் நாங்கள் சந்தித்துக் கொள்ள முடியவில்லை.
அப்படியெனில் இருவரும் திருமனம் செய்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் “ திருமண பந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் நிறைய திருமணங்கள் இப்போது நீடித்து நிற்பதில்லை. ஏராளமானோர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். அதை பார்த்து எனக்கு திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை” என்று கூறினார்.