மே மாதம் முதல் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர், இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை நாடு முழுவதும், எந்த நிறுவனத்தின் லேண்ட்லைன் தொலைபேசிகளுக்கும், செல்போன் எண்களுக்கும் கட்டணமின்றி எண்ணிக்கை இல்லாமல் பேசிக்கொள்ளலாம். இந்த திட்டம் கிராம மற்றும் நகரங்களில் இணைப்புகள் பெற்றுள்ள அனைவருக்கும் பொருந்தும்.
மேலும், தரைவழி தொலைபேசியில் சிறப்பு திட்டம் வைத்திருப்போர், பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்போருக்கும் இத்திட்டம் பொருந்தும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.