சென்னையில் அக்டோபர் மாத மத்தியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 3 ஜி சேவைகள் (மூன்றாம் தலைமுறை) அளிக்கப்படும் என்று அதன் தமிழ்நாடு வட்ட முதன்மை பொதுமேலாளர் வரதராஜன் கூறியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மற்ற நகரங்களில் 3 ஜி சேவை வரும் நவம்பர் மாதத்தில் அளிக்கப்படும் என்று கூறினார்.
மாவட்ட தலைநகரங்களில் நவம்பரில் இந்த சேவை கிடைக்கும் என்றார் அவர்.