ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (23:48 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ராஜஸ்தான்  வீரர் பென்ஸ் ஸ்டோக்ஸ் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐபிஎல்14 வது -2021 சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில்,ராஜஸ்தான் அணிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேந்த பென்ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார். இவர் கடந்த போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக விளையாடிய போது கைவிரலில் காயம் ஏற்பட்ட்து. மேலும் அவருக்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்