ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய சென்னை வீரர்

வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:13 IST)
சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்று சென்னை அணியின் வீரர் டுபிளசிஸ் 56 ரன்கள் விளாசியதன் மூலம் ஆர்ஞ்சுதொப்பியை கைப்பற்றினார்.

இன்று ஐதாப்பாத் அணிக்கு எதிரான 172 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

கெய்க்வாட் 36 பந்திலும், டு பிளிஸிஸ் 32 பந்திலும் இருவரும் அரைசதம் அடித்து அணியின் வழிநடத்திச் சென்றனர்.

 பின்னர் ஜடேஜா , சுரேஷ் ரெய்னாவுடன் கூட்டணி சேர்ந்து நிதானமாக ஆடினார். எனவே 18.3 ஓவரில் சென்னை அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி தொடர்ந்து இந்த வெற்றியை 5 வது முறை ருசிக்கிறது. இதனால் சென்னை அணிவீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை அணியின் வீரர் டுபிளஸிஸ் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இரண்டு முறை ஆட்டமிழக்காமல் 270 ரன்கள் எடுத்துள்ளார். இன்று ஐதராபாத் அணிக்கு எதிரான 56 ரன்கள் விளாசியுள்ளார். அதனால் அவருக்கு இன்று ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்