ருத்ரதாண்டவமாடிய ருத்ராஜ்: மீண்டும் முதலிடத்தில் சிஎஸ்கே!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (06:32 IST)
ருத்ரதாண்டவமாடிய ருத்ராஜ்: மீண்டும் முதலிடத்தில் சிஎஸ்கே!
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட், ருத்ரதாண்டவம் ஆடிய ஆட்டத்தின் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டுபிளசிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகிய ஐந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விட்ட நிலையில் ருத்ராஜ் தனி ஆளாக நின்று சென்னை அணியை கரை சேர்த்தார். அவர் 58 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதை அடுத்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ருத்ராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்