இன்று நடைபெற்று வரும் 8ஆவது ஐபிஎல் போட்டியின் 31ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி டேர் டேவில்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜே.பி. டுமினி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன் பிறகு மூன்றாவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான மனன் வோராவும் 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விருத்திமான் சாகாவும் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 3.3 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.