இதுகுறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், டெல்லி அணி அபாரமாக செயல்பட்டதால் எல்லா சிறப்புகளும் அவர்களையே சென்றடையும். குறிப்பாக டெல்லி அணியின் பேட்டிங் வரிசை மிக அருமையாக அமைந்தது. எங்கள் அணியில் சிமோன்ஸ், பார்த்தீவ் பட்டேல் சிறப்பாக செயல்பட்டாலும் பின் வந்த வீரர்கள் அவ்வாறு செயல்படாததே ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்றார்.