இதில் சென்னை வீரர்களான சுமித் மற்றும் மெக்குல்லம் ஆகிய இரு வீரர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில், களத்தில் சற்று ஈரப்பதம் இருந்ததை சரியாக பயன்படுத்தி கொண்டனர் சென்னை பந்துவீச்சாளர்கள். இதற்காக அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார். மும்பை அணிக்கு தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசியதால் தான் அவர்களை சற்று கட்டுப்படுத்த முடிந்தது என்றார்.