8 ஆவது ஐபிஎல் போட்டியின் நேற்றைய 2 ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் கேப்டன் வார்னர் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்துவிட்டார்.
பின் இணைந்த டு பிளி.சிஸ், தோனி இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் டு பிளிசிஸ் ரன் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கே மாறியது. மறுமுனையில் தோனியும் நடையை கட்டினார். பின் வந்த சென்னை வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும் இறுதியில் 20 ஓவர் முடிவில் அவர்களால் வெறும் 170 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது.