ஐபிஎல்: யுவராஜ் சிங் ரூ.16கோடி, ஜாகிர் கான் 4 கோடிக்கு வாங்கியது டெல்லி
திங்கள், 16 பிப்ரவரி 2015 (17:46 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி அதிரடி ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. ஜாகிர் கானை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
8ஆவது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. அதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்று வருகிறது.
இதுவரை முக்கிய வீரர்கள், எந்தெந்த அணிக்காக வாங்கப்பட்டனர் என்பதன் விவரம் பின்வருமாறு: