கம்பீர் பேட் உடைந்த விவகாரம்: யுவராஜ் சிங்கின் கேலி “ டுவிட் ”

வியாழன், 9 ஏப்ரல் 2015 (15:45 IST)
கொல்கத்தா அணியின் கேப்டனான கம்பீரை கேலி செய்வது போல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.
 

 
8 ஆவது ஐ.பி.எல் டி20 போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் களத்தில் கம்பீர் விளையாடி கொண்டிருந்தபோது, வினய்குமார் வீசிய பந்தை அடிக்க முயன்றார். அப்போது திடீரென அவரது பேட் இரண்டாக பிளந்தது.
 
இதுகுறித்து டெல்லி அணியில் இடம்பெற்றிருக்கும் யுவராஜ் சிங் டுவிட் செய்துள்ளார். அதில் அந்த பேட் இப்போது தான் இது கம்பீர் பேட் போல்வுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கம்பீரின் உருவத்தை கேலி செய்வது போல் யுவராஜ் டுவிட் செய்துள்ளார். 
 
என்னவோ தந்தையை போல் வம்பில் சிக்காமல் இருந்தால் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்