பரத் அருண் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சின் உதவி பயிற்சியாளராகிறார்

வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (11:33 IST)
ஐபிஎல் அணியின் ஒன்றான  பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு உதவி பயிற்சியாளராக திரு. பரத் அருண் நியமிக்கபட்டுள்ளார்.
 
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளது.
 
இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பரத் அருண் கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் எனது பங்களிப்பை செலுத்தவுள்ளது மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்