கொல்கட்டாவில் நடைபெறும் ஐ.பி.எல். கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்யும் மும்பை இந்தியன் அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
முதலில் ஷேன் பாண்டு இரண்டு பவுன்சர்கள் வீசி தாரேயையும், தவானையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்த சௌரப் திவாரி 46 ரன்கள் எடுத்தார்.
டுமினி 19 ரன்களையும், பிராவோ 5 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தற்போது ராயுடு 10 ரன்களுடனும், சதீஷ் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முரளி கார்த்திக் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.