ஐபிஎல் 5: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்

வியாழன், 5 ஏப்ரல் 2012 (14:26 IST)
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸஅணி - ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணி மோதுகின்றன.

டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள பீட்டர்சன், டேவிட் வார்னர், ஜெயவர்த்தனே, ரோஸ் டெய்லர் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.

இதில் டெய்லர் காயம் அடைந்துள்ளார். டெல்லி அணி விளையாடும் 4-வது ஆட்டத்தில் இருந்து பங்கேற்பார். மற்ற 3 பேரும் தங்கள் நாட்டுக்காக விளையாடி வருகிறார்கள். இதில் வார்னர் இந்த மாத கடைசியில் தான் அணியோடு இணைவார். பீட்டர்சனும், ஜெயவர்த்தனேயும் இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவார்கள்.

இரு அணிகளும் ஐ.பி.எல். போட்டியில் 6 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இதுவரை ஒரு முறைக்கூட இறுதிப்போட்டியை எட்டாத இவ்விரு அணிகளுக்கும் இந்த முறை அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்குமா..?

கொல்கத்தாவில் நேற்றிரவு நல்ல மழை பெய்ததால் ஆடுகளம் மூடப்பட்டது. இன்று மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால், இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்க்க கூடும் என தெரிகிறது.

News Summary:

Delhi Daredevils and Kolkata Knight Riders - two sides yet to reach the Indian Premier League (IPL) final even once despite being high on star value - clash at the Eden Gardens Thursday, eyeing a good beginning to their campaign in the fifth year of the cash-rich league on the right note.

வெப்துனியாவைப் படிக்கவும்