ஒரே ஒரு சூப்பர் ஹுயூமனைத் தவிர அனைவரும் திணறினர் –விராட் கோலி கருத்து!

செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:07 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடந்த நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 194 ரன்களை சேர்த்தது. இதில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிறிய மைதானமாக இருந்தாலும் அனைத்து பேட்ஸ்மேன்களுமே பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறினர். இதன் மூலம் அந்த அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி ‘ நாங்கள் 165 ரன்கள்தான் எதிர்பார்த்தோம். ஆனால் 194 ரன்கள் எப்படி வந்தது யாரால் வந்தது என்பது உங்களுக்கே தெரியும். இந்த விக்கெட்டில் ஒரே ஒரு சூப்பர் ஹ்யூமனைத் தவிர அனைவருமே திணறினோம். நான் எதிர்முனையில் நின்று டிவில்லியர்ஸின் ஆட்டத்தை ரசித்தேன்’ எனக் கோலி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்