குயென்டின் டரன்டினோவை அழ வைத்த காட்ஸில்லா

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (10:56 IST)
குயென்டின் டரன்டினோவின் படங்களைப் பார்த்து குழந்தைகள்தான் மிரண்டு அழும். அவர் குழந்தைகள் படமான காட்ஸில்லாவைப் பார்த்து அழுதிருக்கிறார் என்றால்...?
கேரத் எட்வர்ட்ஸ் இயக்கத்தில் இந்த வருடம் காட்ஸிலா திரைப்படம் வெளியானது. படத்தின் ஆரம்பத்தில் சான்ட்ரா பிராடி என்ற கதாபாத்திரத்திரம்  இறந்துவிடும். அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஜுலியட்டி பினோச்.
 
அவர் இறக்கும் காட்சியில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுததாகவும், 3டி கண்ணாடியை கழற்றி கண்ணீரை துடைத்ததாகவும், 3டி படம் பார்த்து அழுதது அதுதான் முதல்முறை என்றும் டரன்டினோ கூறியுள்ளார்.
 
இது நிஜமான பாராட்டா இல்லை டரன்டினோவின் வஞ்சப் புகழ்ச்சியா தெரியாது. ஆனால் டரன்டினோவின் கண்ணீரை காம்ப்ளிமென்டாக எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜுலியட்டி பினோச்.

வெப்துனியாவைப் படிக்கவும்