இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இப்படத்தின் டப்பிங் வேலையை முடித்து கொடுத்து விட்டு ரஜினி, தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்கு சென்றுவிட்டார். படத்தில் கிராபிக்ஸ் பணி நிறைய இருப்பதால் 2.0 அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் இந்தி தியேட்டர் உரிமை ரூ.50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருப்பதால், படம் எப்படியும் பல கோடிகளை வசூல் செய்யும் என கணக்கு போடுகிறார்கள் பாலிவுட் வாலாக்கள்.