திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம்

வியாழன், 23 மார்ச் 2023 (23:27 IST)
திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூரில்  சவுமிய நாராயணா பெருமாள் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், இன்று மாலையீய்ல் முதற்கால யாசகசாலை பூஜைகளுடன் விழா  நடைபெற்றது.

திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூரில்   உள்ள பிரசித்தி பெற்ற கோயில் சவுமிய நாராயண பெருமாள் கோவில். இந்தக் கோவிலில் 8 உப கோபுரங்களுடன்,3 தளங்களுடனும் அஷாடங்க திவ்ய விமானம் அமைந்துள்ள கோவிலாக உள்ளது.

இந்தக் கோவியில் கும்பாபிஷேக நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில்,  வரும் 27 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், இதற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை முதற்கால யாசக சாலை பூஜைகளுடம் விழா தொடங்கியத். இரவு பூர்ணாகுதி நிகழ்ச்சியும், காலை இரண்டாம் காலமும், மாலை 4 மணிக்கு  3 ஆம் காலமும், யாசகசாலை பூஜை  நடக்கிறது. வரும் 25 ஆம் தேதி  4 ஆம் கால யாசக சாலை பூஜையும், வரும் 26 அம் தேதி காலை 6 ஆம் கால யாசகசாலை பூஜையும் மாலை 3 மணிக்கு 7 ஆம் கால யாசகசாலை பூஜையும் நடக்கிறது.

வரும் 27 ஆம் தேதி காலை 8 ஆம் யாசக சாலை பூஜை நடக்கவுள்ளது.

அதன்பின்னர், காலையில், திருமாமகள், தயார், சவுமியய நாராயண பெருமாள், ஆண்டாள்  ராஜகோபுரம் ஆகிய கோபுரங்களில் புனித நீரூற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்