வெண்ணெய்யை கொண்டு உதடுகளை சிவப்பாக்க சில குறிப்புகள் !!

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.

* வெண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யைக் கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் காய்ந்து போகாமல் இருக்கும். பீட்ரூட்டை துண்டுகளாக்கி அதை உதடுகளின் மேல் லேசாக தேய்த்து வந்தால் உதடுகள் ரோஜா கலரில் மாற்றம் ஏற்படும்.
 
* பன்னீரை பஞ்சினால் எடுத்து உதடுகளில் தினமும் பூசி வந்தால் உதடுகள் பொலிவாக மாறி விடும். கொத்தமல்லித்தழையின் சாறை உதடுகளில் இரவு நேரத்தில் பூசி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி அழகு தரும்.
 
* உதடுகள் மென்மையாக இருக்க, வெண்ணெய்யை லேசாகப் பூசி வரலாம். சந்தனத்தை பன்னீரில் குழைத்து உதடுகளில் பூசி, ஊறவைத்து, கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.
 
* ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து உதடுகளில் பூசி வந்தால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறையும். பாலாடையை உதடுகளில் தினமும் பூசி வந்தால்  வெடிப்பு மறைந்து அழகாக மாறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்