பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டும்: டிராய் புதிய அறிவிப்பு

புதன், 2 நவம்பர் 2016 (10:53 IST)
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பிராட்பேண்ட் பயனர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.


 
 
டிராய், பிராட்பேண்ட் வேகம் தொடர்பாக பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனத்திடம் சில நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 
 
டிராய் வெளியிட்டுள்ள நெறிமுறைகளின் படி, பிராட்பேண்டின் குறைந்தபட்ச டவுன்லோடு வேகத்தை 64kbps இருந்து 512kbps ஆக அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுதித்தியுள்ளது. 
 
இந்த 512kbps ஆனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நேரங்களிலும் எந்தவித தங்கும் தடையும் இன்றி கிடைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்