நடுத்தர மக்களுக்கும் கிரெடிட் கார்டு: எஸ்பிஐ அதிரடி!!

திங்கள், 12 டிசம்பர் 2016 (14:43 IST)
புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க எஸ்பிஐ திட்டமிட்டிருக்கிறது. இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே செலவு செய்ய முடியும்.


 
 
கிரெடிட் கார்டு வழங்குவதற்காக வருமான அளவைக் குறைத்து தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். 
 
தற்போது ஒரு கிரெடிட் கார்டு வழங்க 9 முதல் 11 நாட்கள் ஆகின்றது. இதனை 3 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. 
 
பல வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் இருந்தனர். அந்த வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை புதுப்பிக்குமாறு கேட்டு வருகின்றனர். பெரிய எண்ணிக்கையிலான கிரெடிட் கார்டுகள் இதுவரை பயன்படுத்தப்படாமலே இருக்கிறது. இப்போதைக்கு மக்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் கார்டு வழங்குவதற்காக ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம் என்றார் எஸ்பிஐ அதிகாரி.

வெப்துனியாவைப் படிக்கவும்