சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதை தவிர்த்து, 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என தெரியவந்துள்ளது.
மேலும், வர்த்தக முடிவில் பங்குகள் 2.88 சதவீதம் உயர்ந்து 733.25 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுக்கப் பட்டதால் சன் டிவி பங்கு அப்போது 25 சதவீதம் வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.