அழுத்தம் அதிகரித்தால் ஸ்மார்ட்போன் வெடிக்கும்: ரெட்மி எச்சரிக்கை!!

சனி, 19 ஆகஸ்ட் 2017 (15:14 IST)
அதிக அழுத்தத்தினால் ரெட்மி ஸ்மார்ட்போன் வெடிக்ககூடும் என சீன நிறுவனமான சியோமி தெரிவித்துள்ளது.


 
 
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் ஒருவரது ரெட்மீ நோட் 4 மொபைல் வெடித்தது. அந்த மொபைல் வெடித்ததற்கான காரணத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
அதில், வெளியிலிருந்து மொபைலுக்கு அதிகப்படியாட அழுத்தம் தரப்பட்டதால் மொபைல் வெடித்திருக்கலாம் என்று கூறியுள்ளது.
 
மேலும், அதிகப்படியான அழுத்தம் காரணமாக பேட்டரி உள்ளேயே வளைந்து திரையும் சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
 
இதைதொடர்ந்து வாடிக்கையாளர்கள் மொபைலில் அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் வைத்துக்கொள்ளுமாறு அறிவுருத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்