பல மொழிகளில் இமெயில் அனுப்ப பிஎஸ்என்எல் புதிய ஆப்!!

புதன், 5 ஏப்ரல் 2017 (15:49 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம், தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இமெயில் உருவாக்கும் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.


 
 
டேட்டா மெயில் என்ற ஆப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த ஆப் பயன்படுத்தி தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என ஒன்பது மொழிகளில் இமெயில் உருவாக்கலாம்.
 
ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்த ஆப் பயன்படுத்தி தங்கள் தாய்  மொழியிலேயே மெயில் ஐடியை உருவாக்க முடியும்.
 
இந்த ஆப்-ல் ரேடியோ என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் ரேடியோ சேனல் துவக்க முடியும். இந்த ரேடியோ சேனலை சமூக வலைத்தளங்களிலும் ஒளிப்பரப்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்