வளைகுடா நாடுகள் எண்ணெய் கண்டறியும் பணியிலும், ஏற்கனவே கண்டறியப்பட்ட பெட்ரோலிய எண்ணெய் வளங்களில் உற்பத்திக் கிணறுகளை அமைக்கும் பணியிலும் தொடர்ந்து அதிக முதலீடுகளை செய்ய வேணடும் என்று பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுடைய கூட்டமைப்பின் தலைவர் கோரியுள்ளார்.
சர்வதேசசந்தையின் தேவையை ஈடுகட்டுவதையும் தாண்டி கூடுதலான அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்து விட்டதாகக் கூறியுள்ள அவர், தற்போது செய்யப்படும் கூடுதல் முதலீடுகள், வருங்காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் என்று கூறியுள்ளார்.