10 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு உயர்வு

திங்கள், 1 ஜூலை 2013 (14:55 IST)
FILE
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட டாப் 10 நிறுவனங்களில் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.83,195 கோடி உயர்ந்தது.

ஆர்ஐஎல் பங்கு மதிப்பு ரூ.21,991 கோடி உயர்ந்து ரூ.2,78,927 கோடியாகவும், ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ.18,907 கோடி அதிகரித்து ரூ.2,82,416 கோடியாகவும், டிசிஎஸ் மதிப்பு ரூ.18,760 கோடி உயர்ந்து ரூ.2,97,184 கோடியாகவும், ஹெச்டிஎப்சி பங்குகள் ரூ.7,880 கோடி வளர்ச்சி பெற்று ரூ.1,34,869 கோடியாகவும், இன்போசிஸ் மதிப்பு ரூ.4,255 கோடி உயர்ந்து ரூ.1,43,171 கோடியாகவும், கோல் இந்தியா மதிப்பு ரூ.2,369 கோடி அதிகரித்து ரூ.1,91,354 கோடியாகவும், ஐடிசி ரூ.1,225 கோடி உயர்ந்து ரூ.2,56,335 கோடியாகவும் இருந்தது.

அதே சமயத்தில் எஸ்பிஐ மதிப்பு ரூ.2,518 கோடி குறைந்து ரூ.1,33,632 கோடியாகவும், ஹெச்யுஎல் மதிப்பு ரூ.1,254 கோடி குறைந்து ரூ.1,26,478 கோடியாகவும் இருந்தது.



வெப்துனியாவைப் படிக்கவும்