நாபீட் நிறுவனத்திற்கு ரூ.37 கோடி

செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (16:40 IST)
நாஃபீட் என்று அழைக்கப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு, மத்திய அரசு ரூ.37.27 கோடி வழங்குகிறது.

உள்நாட்டு பருப்பு விலை உயராமல் இருக்கவும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய நாஃபீட் கடந்த இரண்டு ஆண்டுகளில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்தது. இந்த இறக்குமதி விலைக்கும், உள்நாட்டில் விற்பனை செய்யும் விலைக்கும் உள்ள வேறுபாட்டை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு வழங்குகிறது.

இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்