காங்கிரஸ் கட்சி என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராகவுள்ளேன் - ராகுல் காந்தி

திங்கள், 20 ஜனவரி 2014 (14:29 IST)
கட்சி தலைமை பிரதமர் என்ன சொன்னாலும் அதை செய்ய தயார் எனவும், எந்த பதவி கொடுத்தாலும் அதை ஏற்க தயார் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
FILE

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபடுவார் என எதிர்ப்பார்க்கப்படும் அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கட்சி தலைமை பிரதமர் பதவி கொடுத்தாலும் அதை ஏற்க தயார் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டின் ஒற்றுமையை காக்க முடியும். ஆம் ஆத்மியின் பல கொள்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. பா.ஜ.க. தனிநபரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தனிநபர் ஒருவரை நம்பி நாடு செல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை, எனக்கு பிரதமர் பொறுப்பு கொடுத்தாலும் அல்லது வேறு எந்த பதவி கொடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்