காங்கிரஸ் ஒரு குடும்பம் நடத்தும் கட்சி: ராஜ்நாத்சிங்

புதன், 29 ஜனவரி 2014 (18:13 IST)
FILE
பாரதீயஜனதா கட்சி ஒரு குடும்பமாக உள்ளது. கட்சியில் எந்த பாகுபாடு இன்றி கலந்தாலோசித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பம் எடுக்கிற முடிவுகளின் படிதான் உறுப்பினர் தேர்வு உட்பட அனைத்தும் செயல்பாட்டுக்கு வருகிறது என பாரதீயஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது நாங்கள் மக்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு கட்சி. பாரதீய ஜனதா ஜாதி அல்லது வகுப்பு அடிப்படையில் ஒருபோதும் வித்தியாசம் காட்டியதில்லை. நாட்டில் மிகவும் விரும்ப கூடிய ஒரு தலைவராக பிரதமர் வேட்பாளர் மோடி உள்ளார். ஒரு தேநீர் விற்பனையாளர் 3 முறை ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகியிருக்கிறார்.

இது எங்கள் கட்சியில் எந்த பின்னணியும் இல்லாதவர்களும் மாநிலத்தில் முதல்வராக முடியும் என்பதை காட்டுகிறது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்