தேர்தல் கிசுகிசு

திங்கள், 9 மார்ச் 2009 (20:02 IST)
மக்களவைத் தேர்தலில் அஞ்சா நெஞ்சர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாம். மதுரையில் களமிறங்கும் அவரை, நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, அண்ணனின் ஆதரவாளர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். அதற்கேற்ப இப்போதே 'வியூகங்கம்' வகுக்கப்பட்டு வருகிறதாம்.

--------------

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தனது பதவியை உதறிவிட்டு அம்மா கட்சிக்கு‌த் தாவினார். இதேபோல் மேலும் சில புள்ளிகளையும் இழுப்பதற்கு அம்மா கட்சியினர் தூபம் போட்டு வருகின்றனராம். இதனால் உஷாராகிப் போன ஆளும் தரப்பு, அம்மா கட்சி அதிருப்தியாளர்களை பட்டியலிட்டு அவர்களுக்கு வலை வீச ஆரம்பித்திருக்கிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்