புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது : பாரிவேந்தர்

சனி, 24 நவம்பர் 2018 (21:26 IST)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது என பாரிவேந்தர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால்  இதுவரை 12 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்படுள்ளன. அதிலுள்ள மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு பரிதாபமாக உள்ளனர்.

இந்நிலையில் பாரிவேந்தர் கூறியுள்ளதாவது:

எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவர்களுக்கு 4 ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.48கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்