அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலவழிக் கல்வி: தங்கம் தென்னரசு

வியாழன், 1 அக்டோபர் 2009 (16:36 IST)
''அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஒ‌ன்றா‌ம் வகு‌ப்பு முத‌ல் ஆ‌ங்‌கில வ‌ழி‌க்க‌ல்‌வி வகு‌ப்புக‌ள் தொட‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று ப‌ள்‌‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் 150 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் 5 அல்லது 6 நாட்களில் இப்பணி நிறைவு பெற்றுவிடும் என்பதால், க‌ல்‌வி அ‌திகா‌ரிக‌ள், தலைமை ஆ‌சி‌‌ரிய‌ர்க‌‌ளி‌ன் பா‌ர்வை‌க்கு சம‌ச்‌சீ‌ர் க‌ல்வி பாட‌த்‌தி‌ட்ட‌த்தி‌ன் நக‌ல் அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்களது கரு‌த்துக‌‌ள் கே‌ட்க‌ப்படு‌ம்.

த‌‌ற்போது அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் 6ஆ‌ம் வகு‌ப்‌பி‌ல் இரு‌ந்துதா‌ன் ஆ‌‌ங்‌கில வ‌ழி‌க்க‌ல்‌வி நடைமுறை‌யி‌ல் இரு‌‌க்‌கிறது. ‌விரை‌வி‌ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி தொடங்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்