உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின் படி, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் வெறியாட்டங்களை கண்டித்தும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தமிழக-கர்நாடக எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கர்நாடக மாநில பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஓசூர் எல்லையில், இருமாநில போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.