இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சச்சின், "2011–ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப்போட்டியில் நான் ஆட்டம் இழந்து வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை. மைதானத்தில் உள்ளே இருந்த நான் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன். வெற்றியை குறித்து எனக்குத் தெரியவந்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். என் வாழ்க்கையில் இது பெருமை அளிக்கக் கூடியதாகும்" என்று கூறினார்.