மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் கோலியும், மேற்கு இந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயிலும் முக்கியமான வீரர்களாக இந்த போட்டியில் கருதப்படுகிறார்கள்.
இந்திய மண்ணில் நடக்கும் இந்த போட்டியில் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவுக்கு பலமாக உள்ளதாலும். தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதாலும். இந்த போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கெயிலின் புயல் வேக ஆட்டத்தை கட்டுப்படுத்தினால் இந்தியா வெற்றி பெறுவது எளிது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.