உலகக்கோப்பை கிரிக்கெட் டிக்கெட்!; ப்ளாக்கில் லட்ச கணக்கில் விற்பனை!?

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (12:07 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. 10 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான டிக்கெட் முன்பதிவு BookmyShow செயலி மூலமாக தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இடைத்தரகர்கள் சிலர் டிக்கெட்டுகளை வாங்கி அதிகவிலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியின் டிக்கெட்டுகள் மட்டுமே ரூ.60 ஆயிரம் தொடங்கி ரூ.1 லட்சம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்