உலகக் கோப்பை: அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சாதிக்கும் - பிரெட் லீ

புதன், 25 மார்ச் 2015 (10:26 IST)
நாளை நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ கருத்து கூறியுள்ளார்.
மேலும் போட்டி குறித்து பிரெட் லீ கூறுகையில், அரை இறுதி போட்டியில் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணி வென்று சாதிக்கும். பேட்டிங் வரிசையில் கிளார்க், வார்னர், பின்ச், சுமித் போன்ற அதிரடி வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வலுசேர்க்கும் நிலையில் உள்ளனர். இவர்களை கட்டுபடுத்தாவிட்டால் எதிரணி கதிகளங்க நேரிடும். மேலும் ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என  மூன்று  துறையிலும்  சமபலத்துடன் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
 
சிட்னி ஆடுகளம் வேகபந்து வீச்சுக்கு உகந்தது அல்ல. இதனை சுழற்பந்து வீச்சாளர்கள் நன்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். இந்திய அணிக்கு இது சாதகமான விஷயம் ஆகும். மேலும் இந்திய வேகபந்து வீச்சாளரான ஷமி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அசத்தி வருகிறார். எனினும் இந்திய பந்து வீச்சாளர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்