இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனாக மிதாலிராஜ் நியமனம்

வியாழன், 9 ஜூலை 2015 (04:31 IST)
இந்தியா–நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி கேப்டனாக மிதாலிராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

 
இந்தியா–நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகள் வரும் ஜூலை 11, 13 மற்றும் 15ஆம் தேதிகளில்  நடைபெறுகிறது.
 
இந்தப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மிதாலிராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய அணியின் விவரம்: மிதாலிராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி, சஷ்மிதா வர்மா, வனிதா, லித்திகாகுமாரி, ராஜேஸ்வரி, கெயத்வாட், எக்தா பிஷட், ஜூலன் கோசுவாமி, ஹர்பிரீத்கவூர், கம்ரிதி, சினேக் ரானா, பூனம் யாதவ், அனுஜாபாட்டீல், சுப்புலட்சுமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்